நெப்போலியன் காலத்து நகைக் கொள்ளை வழக்கில் இரண்டு பேர் கைது

2 Min Read

பாரீஸ், அக். 27– பி​ரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள புகழ்​பெற்ற அருங்​காட்​சிகம் லூவ்​ரே. கடந்த வாரம் கிரேன் ஒன்​றின் உதவி மூலம், மியூசி​யத்​தின் மேல்​மாடி ஜன்​னல் வழி​யாக நுழைந்த கொள்​ளை​யர்​கள் மன்​னர் நெப்​போலியன் காலத்து கிரீடம் மற்​றும் பிரெஞ்சு ராணி​கள் அணிந்த நெக்​லஸ் உட்பட 8 விலை உயர்ந்த நகைகளை கொள்​ளை​யடித்து விட்டு மோட்​டார் சைக்​கிளில் தப்​பிச் சென்​றனர். இவற்​றின் மொத்த மதிப்பு 102 மில்​லியன் டாலர் என மதிப்​பிடப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து பாரீஸ் சிறப்பு படை காவல்துறையினர் விசா​ரணை நடத்தி வந்​தனர். இந்​நிலை​யில் இந்த கொள்ளை சம்​பவம் தொடர்​பாக சந்​தேக நபர்​கள் இரு​வரை காவல்துறையினர் கைது செய்​துள்​ளனர். இவர்​களிடம் தீவிர வி​சா​ரணை நடை​பெற்​று வரு​கிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன்

கமலா ஹாரிஸ் கூறுகிறார்

வாசிங்டன், அக். 27– அமெரிக்க வரலாற்றில் பெண் அதிபர் நிச்சயம் இடம்பிடிப்பார் என தான் எதிர்பார்ப்பதாக ஜனநாயக கட்சியின் முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.

அண்மையில் பன்னாட்டு ஊடக நிறுவனம் ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்தார். அதில் இது குறித்து பேசியுள்ளார். கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப்பை எதிர்த்து கமலா ஹாரிஸ் போட்டியிட்டார். தேர்தலில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அப்போதைய அதிபர் ஜோ பைடன் பாதியில் விலகிய நிலையில் கமலா ஹாரிஸ் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ்றாட்டை பூர்வீகமாக கொண்டவர்.

போட்டி

“நிச்சயம் எனது பேரப் பிள்ளைகள் வெள்ளை மாளிகையில் பெண் அதிபர் ஒருவர் பதவியில் இருப்பதை தங்கள் வாழ்நாளில் பார்ப்பார்கள் என நம்புகிறேன். அது நானாக கூட இருக்கலாம். அடுத்த அதிபர் தேர்தலில் நான் போட்டியிடுவதற்கான வாய்ப்பு உள்ளது. இருப்பினும் அது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. அரசியலில் எனக்கு எதிர்காலம் உள்ளதாக நம்புகிறேன்.

நான் கருத்துக் கணிப்புகளை கருத்தில் கொள்வது இல்லை. அப்படி இருந்திருந்தால் நான் தேர்தலில் போட்டியிட்டு இருக்க மாட்டேன், இங்கு அமர்ந்து பேசி இருக்கவும் மாட்டேன். தன் மீதான விமர்சனங்களை அதிபர் டிரம்ப்பால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை” என கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

சீனாவில் நிலநடுக்கம்

பெய்ஜிங், அக். 27– சீனாவின் ஜிலின் மாகாணம் ஹன்சுன் பிராந்தியத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.5 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் பல கட்டடங்கள் குலுங்கின.

இதன் அதிர்வினை உணர்ந்த மக்கள் பயந்து தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வீதியில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *