திருத்துறைப்பூண்டியில் புற்றுநோய் கண்டறியும் இலவச மருத்துவ முகாம்

1 Min Read

திருத்துறைப்பூண்டி, அக் 27– திருத்துறைப்பூண்டி லயன்ஸ் கிளப் டவுன், பெரியார் மருந்தியல் கல்லூரி மற்றும் மருத்துவ குழுமம் ஹர்சமித்ரா  புற்றுநோய் மற்றும் பொது மருத்துவமனை இணைந்து நடத்திய புற்றுநோய் கண்டறியும் மற்றும் இலவச பொது மருத்துவ முகாம் திருத்துறைப்பூண்டி தனியார் மருத்துவமனையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் திருச்சி பெரியார் மருத்துவ கல்லூரி மருத்துவர்கள், பேராசிரியர்கள், மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்களை திராவிடர் கழக மன்னார்குடி மாவட்ட செயலாளர் சு.கிருஷ்ணமூர்த்தி, மாநில இளைஞரணி துணை செயலாளர் அ.ஜெ.உமாநாத், பகுத்தறிவாளர் காஞ்சிபுரம் நா.கவிதம்பி, நகர மகளிரணி செயலாளர் சு.சித்ரா ஆகியோர் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை சந்தித்து வாழ்த்து கூறினார்கள்.

இந்த நிகழ்வில் நூற்றுக்கு மேற்பட்ட பயனாளிகள் பயனடைந்துள்ளனர். அவர் களுக்கு நம் மருத்துவ குழுமம் சார்பாக இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *