சோழவரம் – புழல் ஒன்றிய கழகக் கலந்துரையாடல்

1 Min Read

செங்குன்றம், அக். 27– தமிழர் தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க, டிசம்பர் மாதத்தில் நடைபெற இருக்கிற “இதுதான் ஆர்எஸ்எஸ் – பாஜக ஆட்சி, இதுதான் திராவிடம் – திராவிடல் மாடல் ஆட்சி “என்ற தலைப்பின் சார்பில் நடைபெறுகிற கூட்டத்தை சிறப்பாக நடத்த சோழவரம், மற்றும் புழல் ஒன்றிய சார்பாக கலந்துரையாடல் கூட்டம் சென்னையை அடுத்த செங்குன்றத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட கழகத் தலைவர் புழல்.த ஆனந்தன் தலைமை ஏற்று பல்வேறு கருத்துக்களை வழங்கினார்.

இக்கூட்டத்தில் புழல் நகர தலைவர் புழல் சோமு, புழல் ஒன்றிய கழக செயலாளர் வடகரை உதயகுமார், பொதுக்குழு உறுப்பினர் ந. கஜேந்திரன், மாவட்ட துணை தலைவர், புழல் க. ச. க இரணியன், தோழர் பாலு, கும்முடிப்பூண்டி மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ஓவியர் ஜனாதிபதி, மற்றும் மாவட்ட இளைஞரணி தலைவர் சோழவரம் ப. சக்ரவர்த்தி.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *