தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு நிதியை கிள்ளிக் கொடுக்கிறது கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

நெல்லை, அக்.27 ஒவ்வொரு முறையும் கேட்கும் நிவாரணத்தை கொடுக்காமல் ஒன்றிய அரசு கிள்ளிக் கொடுக்கிறது என்று கனிமொழி எம்.பி. குற்றஞ்சாட்டியுள்ளார்.

நெல்லையில் நேற்று (26.10.2025) அவர் அளித்த பேட்டியில், ஒன்றிய அரசின் ஆய்வு குழு இந்த முறையாவது மாநில அரசு கேட்கும் நிவாரணத்தை வழங்க வேண்டும். ஒவ்வொரு முறையும் தமிழ்நாடு முதலமைச்சர் கேட்கும் நிவாரணத்தை கொடுக்காமல் ஒன்றிய அரசு கிள்ளிக் கொடுக்கிறது.

விவசாயிகளுக்கு ஒன்றிய அரசின் நிவாரணம் கிள்ளிக் கொடுப்பதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த பயனும் இல்லை இல்லை. விவசாயிகளின் துன்பத்தையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளாத வகையில் நிவாரணத்தை வழங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

மக்கள் உண்மையிலேயே உதவி செய்யக்கூடிய எண்ணத்தோடு நிவாரணம் வழங்கப்பட வேண்டும். பீகார் தேர்தலை பொறுத்திருந்து பார்ப்போம். ஜனநாயகம் வெல்ல வேண்டும் என்பதுதான் அத்தனை பேரின் எதிர்பார்ப்பு. வெல்லும் என நம்பிக்கையோடு காத்திப்போம் என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *