ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

1 Min Read

கவனத்திற்குரிய 

முக்கிய செய்திகள்

9.11.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* காங்கிரஸ் ஆட்சியில் அமைந்த பொதுத் துறை நிறுவனங்களை மோடி அரசு அழிக்கிறது; ஆதிவாசிகளை வனவாசிகள் என பாஜக மாற்றி அவர்களது உரிமையைப் பறிக்கிறது என ராகுல் மற்றும் பிரியங்கா குற்றச்சாட்டு.

* இட ஒதுக்கீடு என்பது நிரந்தரமாகி விட்டதோடு, மேலும் விரிவடைகிறது. எனவே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திட அனைத்து தரப்பினரின் ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும் என்கிறது தலையங்க செய்தி.

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

* அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்களாக நியமனம்  என்ற தமிழ்நாடு அரசாணைக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: ஜன. 25க்கு வழக்கு ஒத்திவைப்பு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை காங்கிரஸ் ஆட்சியில் 2013இல் தொடங்கிய பொருளாதார மீட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது;  திட்டமிட்ட சதி என காங்கிரஸ் குற்றச்சாட்டு.

தி டெலிகிராப்:

* பிஎச்டி சேர்க்கையில் இட ஒதுக்கீடு கொள்கையை அமல்படுத்த முடியாது என்ற அய்அய்எம் கோழிக்கோடு வாதத்தை கேரள உயர் நீதிமன்றம் நிராகரித்தது. ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளித்திட உத்தரவு.

ஹிந்துஸ்தான் டைம்ஸ்:

* எதிர்க்கட்சிகளின் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு பிரச்சாரத்தை மழுங்கடிக்க ஓபிசி கணக்கெடுப்பை நடத்திட பாஜக திட்டம்.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *