தியாகராயர் நகரில் ரூ. 28 கோடியில் ஆகாய நடை மேம்பாலம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

Viduthalai
2 Min Read

அரசியல்

சென்னை, மே 17- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (16.5.2023) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை, தியாகராயர் நகர் பேருந்து நிலையத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில், மாம்பலம் ரயில் நிலைய நடைமேம்பாலத்திலிருந்து ரயில்வே மார்க்கெட் சாலை, மேட்லி சாலை வழியாக தியாகராயர் நகர் பேருந்து நிலையம் வரை ரூ.28 கோடியே 45 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப் பட்டுள்ள நகரும் படிக்கட்டு மற்றும் மின்தூக்கிகளுடன் கூடிய ஆகாய நடைமேம்பாலத்தை மக்க ளின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

தியாகராயர் நகர் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான ரங்கநாதன் தெரு, மேட்லி சாலை, மார்க்கெட் சாலை, நடேசன் தெரு ஆகிய இடங்களில் பாதசாரிகளின் போக்குவரத்து நெரிசலை போக் கும் வகையிலும், ரயில் மற்றும் பேருந்து பயணிகள் சிரமமின்றி ரயில் மற்றும் பேருந்து நிலையத்தை அடைந்திடவும் இந்த ஆகாய நடைமேம்பாலம் அமைக்கப்பட் டுள்ளது.

மாம்பலம் ரயில் நிலைய நடைமேம்பாலத்தை தியாகராயர் நகர் பேருந்து நிலையத்துடன் இணைக்கும் வகையிலும், மாம் பலம் ரயில் நிலைய நடைமேம் பாலத்திலிருந்து ரயில்வே மார்க் கெட் சாலை, மேட்லி சாலை வழியாக தியாகராயர் நகர் பேருந்து நிலையம் வரை சீர்மிகு நகர திட்ட நிதியின் கீழ், 28 கோடியே 45 இலட்சம் ரூபாய் செலவில், 7 மீட்டர் உயரத்தில், 570 மீட்டர் நீளம் மற்றும் 4.20 மீட்டர் அக லத்தில் நகரும் படிக்கட்டு மற்றும் மின்தூக்கிகளுடன் கூடிய ஆகாய நடைமேம்பாலம் அமைக்கப் பட்டுள்ளது.

இந்த ஆகாய நடைமேம்பால மானது பல்வகை போக்குவரத் தினை ஒருங்கிணைக்கும் வகையில், தென் தமிழ்நாட்டிலிருந்து வரும் ரயில் பயணிகள் மற்றும் மின்சார தொடர்வண்டியில் பயணிக்கும் பயணிகள் சிரமமின்றி தியாகராயர் நகர் பேருந்து நிலையத்தை அடை யும் வண்ணம், மாம்பலம் ரயில் நிலைய நடைமேம்பாலத்துடன் இந்த ஆகாய நடைமேம்பாலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆகாய நடைமேம்பாலத் தில் மின்னாக்கிகள் (Generators), காவல்துறை கண்காணிப்பு அறை யுடன் இணைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்கள், பொதுமக்களுக்கான அறிவிப்பு ஒலிபெருக்கிகள், துருப் பிடிக்காத எஃகிலான குப்பை கூடைகள், பாதுகாவலர் அறைகள், நவீன கழிவறைகள் போன்ற கூடு தல் வசதிகள் அமைக்கப்பட் டுள்ளது.

இந்த ஆகாய நடைமேம்பாலத் தால் தினமும் சுமார் ஒரு இலட்சம் மக்கள் பயனடைவர். தியாகராய நகரில் ஆகாய நடைமேம்பாலத்தை திறந்து வைத்த முதலமைச்சர், அந்நடைமேம்பாலம் முழுவதும் நடந்து சென்றார்.

பின்னர், நடைமேம்பாலத்திலிருந்து இறங்கி ரங்கநாதன் தெரு முழுவதும் நடந்து சென்று இரு மருங்கிலும் கூடியிருந்த பொதுமக்களின் உற்சாக வரவேற் பினை ஏற்றுக் கொண்டு, அவர்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, பொது மக்களுடன் செல்பி புகைப் படங்களும் எடுத்துக் கொண்டார். 

இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர் வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, சட்டமன்ற உறுப் பினர்கள் த.வேலு, ஜெ.கருணாநிதி, துணை மேயர் மு.மகேஷ் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *