‘நான் முதல்வன்’ திட்டத்திற்கு போட்டித் தேர்வில் இலவச பயிற்சி வகுப்புகள்

Viduthalai
2 Min Read

‘நான் முதல் வன்’ திட் டத்தின் கீழ் தர்மபுரியில் நடைபெற உள்ள போட்டித் தேர் வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற் பதற்கு விண்ணப்பிக்க வருகிற 20-ஆம் தேதி கடைசி நாள் ஆகும். இது தொடர்பாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட் டுள்ளதாவது:-

இலவச பயிற்சி வகுப்புகள்

‘நான் முதல்வன்’ திட் டத்தின் கீழ் பணியாளர் தேர்வாணையம், வங்கிப் பணிகள், ரயில்வே பணி களுக்கான போட்டித் தேர்வுக ளுக்கு தயாராகும் இளைஞர்கள் பயனடை யும் வகையில் தருமபுரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத் தப்பட உள்ளது. சிறந்த பயிற்று னர்களை கொண்டு இந்த இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 25-ஆம் தேதி முதல் கடகத்தூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலு வலகத்தில் தொடங் குகிறது. இந்த பயிற்சி வகுப்புகள் 3 மாத காலம் நடைபெறும். பட்டப் படிப்பு முடித்த மாண வர்கள் இந்த பயிற் சியில் சேர தங்களுடைய சரி யான முழுமையான விவ ரங்களை  https://bit.ly/44MQbel என்ற இணையதளத்தில் விண் ணப்பிக்க வேண்டும். தரு மபுரி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண் டும் விண்ணப்பிக்கலாம். அல்லது அரசு இ-சேவை மய்யம் மூலமாக விண் ணப்பிக்கலாம்.

இந்த பயிற்சியில் சேர விண்ணப் பிக்க வருகிற 20-ஆம் தேதி கடைசி நாள் ஆகும். இந்த இல வச பயிற்சி வகுப்புகள் தொடர்பான விவரங் களை பெற தருமபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலு வலர், தருமபுரி மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவ ல கம், பாலக்கோடு அரசு கலைக் கல்லூரி முதல மைச்சர் ஆகி யோரை தொடர்பு கொள்ளலாம். 

தருமபுரி மாவட்டத் தில் உள்ள போட்டித் தேர்வர்கள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப் படும் இந்த இலவச பயிற்சி வகுப் பில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். முதலில் பதிவு செய்பவர்களுக்கே முன் னுரிமை அளிக்கப்படும் என்ப தால் காலதாமதம் இன்றி விரை வில் பதிவு செய்து கொள் ளுமாறு கேட்டுக் கொள்ளப்படு கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *