விழுப்புரம், அக். 25- விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக்கோட்டையை சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் சுற்றுலாத் துறைக்கு கொள்கையை உருவாக்கி, 300-க்கும் மேற்பட்ட புதிய சுற்றுலா மையங்களை உருவாக்கவும், அதன் மூலம் சர்வதேச சுற்றுலா மையமாக தமிழகத்தை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செஞ்சிக்கோட்டைக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவதால், கோட்டையின் அடிவாரம் மற்றும் முக்கியப் பகுதிகளில் கூடுதலாக குடிநீர், மின் விளக்கு, இருக்கை, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
