வலுப்பெற்றது காற்றழுத்தத் தாழ்வு பகுதி! 27 ஆம் தேதி புயலுக்கு வாய்ப்பு

1 Min Read

சென்னை, அக்.25 தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு 2 ஆவது காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று (25.10.2025) உருவானது. இந்த புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகி உள்ளதாக இந்திய  வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்த மான் கடலில் நிலை கொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் இன்று (25.10.2025) அதிகாலை 5.30 மணிக்கு இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது.

இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கட லில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு- வடமேற்கு நோக்கி நகர்ந்து அக்டோபர் 25 ஆம் தேதி அன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தீவிரமடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது அக்டோபர் 26 ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வரும் 27 ஆம் தேதி அன்று புயலாக மாற வாய்ப்புள்ளதாவும் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *