சென்னை, அக்.25 தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு 2 ஆவது காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று (25.10.2025) உருவானது. இந்த புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்த மான் கடலில் நிலை கொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் இன்று (25.10.2025) அதிகாலை 5.30 மணிக்கு இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது.
இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கட லில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு- வடமேற்கு நோக்கி நகர்ந்து அக்டோபர் 25 ஆம் தேதி அன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தீவிரமடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது அக்டோபர் 26 ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வரும் 27 ஆம் தேதி அன்று புயலாக மாற வாய்ப்புள்ளதாவும் கூறப்பட்டுள்ளது.
