பெண்கல்வியை ஊக்குவிக்கவும், வறியோருக்கு உதவும் வகையிலும் மாணவிகளுக்கு ரூ.15 ஆயிரம் கல்வி உதவித்தொகை

தமிழ்நாடு

ஜெயங்கொண்டம், அக். 24- பெரியார் மேல்நிலைப் பள்ளியில் (ஜெயங்கொண்டம்)- பன்னிரெண்டாம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவி விசுவதர்சினி மற்றும் மணிஷ்யா ஆகியோர் கல்வியில் சிறந்து விளங்கியதோடு, வறிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவிகளாக இருப்பதனால், பெண் கல்வியை ஊக்குவிக்க வறியோருக்கு உதவும் வகையில் செயல்படும் “சபாபதி கல்வி அறக் கட்டளை” சார்பில் தலா ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

பள்ளி முதல்வர் இரா.கீதா, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உதவித் தொகைப் பெற்ற மாணவிகளை வாழ்த்தினர். முதல்வர் இரா.கீதா தெரிவித்ததாவது: “இத்தகைய உதவித் தொகைகள் வறிய மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு பெரும் துணையாகின்றன. சமூக நலனில் அக்கறை கொண்ட அமைப்புகள் மாணவர்களுக்கு வழங்கும் உதவிகள், அவர்களின் எதிர்காலத்தை உருவாக் கும் ஒரு சிறந்த படிக் கல் ஆகும்” என்று பெற் றோரிடம் கூறினார்.

இந்த நிகழ்வு மற்ற மாணவர்களுக்கும் கல்வியில் முன்னேற ஊக்கமளிக்கக்கூடிய ஒரு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது. எனவே சபாபதி கல்வி அறக்கட்டளைக்கு கல்வி நிறுவனத்தின் சார்பாகவும் பெற்றோர்கள் சார்பாகவும்  நன்றி தெரிவித்துக் கொள்ளப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *