தமிழ்நாட்டில் கடந்த 45 நாட்களில் மின்நுகர்வு 19,387 மெகாவாட்டாக அதிகரிப்பு அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தகவல்

1 Min Read

அரசியல்

சென்னை,மே18 – சென்னையில் இது வரை இல்லாத வகையில்   4,016 மெகா வாட் மின்சாரம் நுகர்ப்பட்டுள்ளதாக அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தகவல் தெரிவித்துள்ளார். 

யூனிட் கணக்கில் 16.5.2023 அன்று சென் னையில் 9 கோடியே 3 லட்சத்து 40 ஆயிரம் யூனிட் மின்சாரம் பயன்படுத்தப் பட்டுள்ளது. சென்னையில் 109 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்ததை அடுத்து மின் நுகர்வு முன் எப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளது. இதனை அடுத்து செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கூறியதாவது:

தமிழ்நாட்டில் கடந்த 45 நாட்களில் 19,387 மெகா வாட்டாக மின்நுகர்வு அதிகரித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் சீராக மின்விநியோகம் செய்யப்பட்டுவருகிறது.

சென்னையில் கடந்த 2 நாளில்  (மே 15,16) 4,016 மெகா வாட்டாக மின்நுகர்வு அதிகரித்துள்ளது. 13 துணை மின் நிலையங்கள் விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மின்கட்ட மைப்புக்கு தேவையான பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவு றுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மின் நுகர்வு அதிகம் உள்ள இடங்களில் கணக்கெடுக்கப்பட்டு சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மின் சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *