ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் ‘நமது தெருவில், நமது எம்.எல்.ஏ.’ மக்கள் சந்திப்பு இயக்கம் தொடக்கம்

1 Min Read

அரசியல்

சென்னை,மே 18- தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளபடி, ‘நமது தெருவில், நமது எம்.எல்.ஏ’ என்கிற மக்கள் சந்திப்பு இயக்கம் ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதியில் நேற்று (17.5.2023) தொடங் கப்பட்டது. ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் பெருநகர சென்னை மாநகராட்சி – வார்டு 109, பாகம் 13, 14, 15 மற்றும் 16 ஆகியவற்றில் திருவள்ளுவர்புரம் முதல் தெரு, இரண்டாவது தெரு, மூன்றாவது தெரு, சக்தி நகர் இரண்டாவது தெரு, நான் காவது தெரு ஆகிய பகுதிகளில், ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் நாகநாதன் கள ஆய்வில் ஈடுபட்டு, பொதுமக்களின் கோரிக்கைகளை கேட் டறிந்தார். அப்போது பல்வேறு  துறைகளின் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.

பெருநகர சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு மின்சார வாரியம், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் வாரியம் ஆகியவற்றின் அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுடன், பொதுமக்களின் கோரிக்கைகள் மீது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு, அறி வுறுத்தல்களை வழங்கினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *