கேடு விளைவிக்கும் தீபாவளி சென்னையில் 226 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம்

சென்னை, அக்.22  தீபாவளியையொட்டி சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 3 நாட்களில் 225.87 டன் பட்டாசு கழிவு அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அந்த வகையில் கடந்த அக்.19, அக்.20 மற்றும் அக்.21 ஆகிய 3 நாட்களில் சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் 225.87 டன் பட்டாசு கழிவுகளை சேகரித்து, அவற்றை பதப்படுத்தி அழிப்பதற்காக கும்மிடிப்பூண்டி மய்யத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக வளசரவாக்கம் மண்டலத்தில் 24.08 டன் கழிவும், கோடம்பாக்கம் – 20.45 டன், தேனாம்பேட்டை-19.84 டன், திருவிக நகர்-17.70 டன், தண்டையார்பேட்டை திருவொற்றியூரில் 17.33 டன், ஆலந்தூர் மண்டலத்தில் 13.09 டன், பெருங்குடி மண்டலத்தில் 12.33 டன், ராயபுரம் மண்டலத்தில் 11.95 டன் கழிவுகளும் மாநகராட்சி பணியாளர்களால் இரவு, பகலாக அகற்றப்பட்டுள்ளன. சென்னையில் மிக குறைந்தபட்சமாக அண்ணா நகரில் 7.18 டன பட்டாசு கழிவு சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *