பட்டாசு வெடிப்பால் தீக்காயம் அடைந்த குழந்தைகள் உட்பட 157 பேருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை

சென்னை, அக்.22 தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் அடைந்த குழந்தைகள் உட்பட 157 பேருக்கு, சென்னை அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை அளிக்கப் பட்டுள்ளது.

பட்டாசு வெடிப்பில் தீக்காயம்

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பட்டாசுகள் வெடிக்கும் போது ஏற்படும் தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதற் காக, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 20 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டது. அதேபோல், சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

157 பேர் தீக்காயம்

இந்நிலையில், தீபாவளியன்றும், அதற்கு முந்தைய நாளும் சென்னையில் பட்டாசு வெடிக்கும் போது 157 பேர் தீக்காயம் அடைந்துள்ளனர். இதில், 44 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக 13 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். புறநோயாளி யாக 20 பேர் சிகிச்சை பெற்று சென்றுள்ளனர். ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்நோயாளியாக 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் உள்நோயாளியாக 6 பேர் சிகிச்சை பெறுகின்றனர். புறநோயாளியாக 24 பேரும் சிகிச்சை பெற்றுள்ளனர்.

ஓமந்தூரார் அரசு மருத்துவ மனையில் உள்ேநாயாளியாக 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். புறநோயாளியாக 3 பேர் சிகிச்சை பெற்றனர். அரசு ஸ்டான்லி மருத்துவமனை யில் உள்நோயாளியாக 16 பேர் சிகிச்சை பெறுகின்றனர். புறநோயாளியாக 32 பேரும் சிகிச்சை பெற்றுள்ளனர். கண்களில் தீக்காயம் ஏற்பட்டதால் எழும்பூர் அரசு கண் மருத்துவ மனையில் உள்நோயாளியாக 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். புறநோயாளியாக 34 பேரும் சிகிச்சை பெற்றுள் ளனர். இவை தவிர, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 100-க்கும் மேற்பட்டோருக்கு தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *