சென்னை, அக்.22 இந்திய-ஜப்பான் தொழில் வர்த்தக சபை சார்பில், இணையம் வழியாக ஜப்பானிய மொழி பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக, சென்னை, தேனாம்பேட்டையில் இயங்கி வரும் இந்திய-ஜப்பான் தொழில் வர்த்தக சபையின் பொதுச்செயலாளர் சுகுணா ராமமூர்த்தி நேற்று (21.10.2025) வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய-ஜப்பான் தொழில் வர்த்தக சபையின் மொழிப் பள்ளி,ஜப்பானிய மொழிபற்றிய ஆரம்பநிலை பயிற்சியை இணையம் வழியாக அளிக்க உள்ளது. இதில், ஜப்பானிய மொழி யில் பேசுவது, எழுதுவது குறித்து சொல்லித் தரப்படும். இதற்கான, இணைய வழி வகுப்பு ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் பிற் பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இந்த பயிற்சியில் சேருவோருக்கு ஜப்பானிய மொழி மட்டுமின்றி ஜப்பானிய கலை, கலாச்சாரம், வணிக நடமுறைகள் ஆகிய வும் கற்றுத் தரப்படும். வகுப்பு நவ. 2-ஆம் தேதி தொடங்குகிறது. இப்பயிற்சியில் சேரும் மாண வர்களை, அடுத்த ஆண்டு ஜூலைமாதம் ஜப்பான்ஃபவுண் டேஷன் சார்பில் நடத்தப்பட உள்ள ‘ஜெஎல்பிடி என்-5 லெவல் தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் பயிற்சி அமைந் திருக்கும். இந்த இணைய வழி பயிற்சிவகுப்பில்சேர விரும்பும் மாணவர்கள் 98843 94717 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
