பருவ மழை காரணமாக தினசரி மின் தேவை 11,000 மெகாவாட்டாகக் குறைவு

சென்னை, அக்.22 தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங் கியுள்ள நிலையில், தினசரி மின் தேவை 11 ஆயிரம் மெகாவாட்டாகக் குறைந்துள்ளது.

தமிழ்நாட்டில் தினசரி மின் தேவை சராசரியாக 16 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் உள்ளது. கோடைகாலத்தில் 20 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு அதிகரிக்கும். அதிகபட்சமாக கடந்த 2024 ஆண்டு மே 2-ஆம் தேதி தினசரி மின் தேவை 20,830 மெகாவாட் பாகப் பதிவானது. இந்தாண்டு அதிகபட்சமாக கடந்த ஏப்.24-ஆம் தேதி 20,148 மெகாவாட் மின் தேவை பதிவானது.

கோடை காலத்தில் வெயி லின் தாக்கம் காரணமாக மின் தேவை எப்படி அதிகரிக் கிறதோ,அதே போல், மழை மற்றும் குளிர் காலங்களில் மின்சாரப் பயன்பாடு குறைந்து, மின் தேவையும் குறைவது வழக்கம்.

மின்நுகர்வு 10,923 மெகாவாட்

இந்நிலையில், தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை கடந்த 16-ஆம் தேதி தொடங்கியது. இதனால், தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வரு கிறது. மழை காரணமாக மின் தேவையும் குறைந்துள்ளது. கடந்த 19-ஆம் தேதி மின் தேவை 12,557 மெகாவாட்டாகவும், 20-ஆம் தேதி தீபாவளி அன்று 10,923 மெகாவாட்டாகவும் இருந்தது.

இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் மின்சாரப் பயன்பாடு கணிசமாகக் குறைந் துள்ளது. பொதுவாக, பருவ மழையின் போதுமின் பயன்பாடு 50 சதவீதம் குறையும். மேலும் தீபாவளியையொட்டி கடந்த 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் பெரும்பாலான அலுவல கங்கள், தொழிற்சாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் மின் நுகர்வு குறைவாக இருந்தது. பொதுவாக, தமிழ்நாட்டில் சென்னை நகரில் அதிகபட்ச மின்தேவை இருக்கும் நிலையில், பலர் சொந்த ஊர்களுக்கு சென் றுள்ளதால் சென்னையின் மின்தேவை குறைந்துள்ளது. தற்போதுள்ள சூழலில், அனல் மின் நிலையம் மற்றும் பிற மின் உற்பத்தி நிலையங்களில் 50 சதவீத உற்பத்திகூட மின் தேவையைப் பூர்த்தி செய்ய போதுமானதாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

பாகிஸ்தானில் காற்று மாசுபாடு ஏற்பட்டதற்கு இந்தியாவின் தீபாவளியே காரணமாம்!

இந்தியாவின் தீபாவளி கொண்டாட்டம், பாகிஸ்தானுக்கு தலைவலியாக மாறியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். வட இந்திய மாநிலங்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியது, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் தீவிர காற்று மாசுபாட்டை ஏற்படுத்தியுள்ளது. இதனால், டில்லிக்கு அடுத்தபடியாக உலகின் அதிக மாசுபாடான நகரங்களில் பஞ்சாப்பின் லாகூர் 2-ம் இடம் பிடித்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *