தமிழ்நாடு: 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்கள் அறிவிப்பு வெளியீடு

தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 1,450 காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் உள்ள ஊராட்சி செயலாளர்கள் ஊராட்சிகளின் முழு நிர்வகப்பணிகளை கவனித்து வருகின்றனர்.

குறிப்பாக, தலைவர், உறுப்பினர்களுக்கு உறுதுணையாக இருந்து ஊராட்சியின் அன்றாட செயல்பாடுகளை கவனிப்பதோடு, ஒன்றிய, மாநில அரசு திட்டங்களை செயல்படுத்துதல், குடிநீர், தெருவிளக்கு, சாலைகள் பராமரிப்பு போன்ற அடிப்படை வசதிகளை உறுதி செய்தல், சுகாதாரம் மற்றும் சுகாதாரம் தொடர்பான அரசு திட்டங்களை மேற்பார்வையிடுவதோடு, வரிவசூல் உள்ளிட்ட அரசால் அறிவிக்கப்படும் அனைத்துத் திட்டங்களையும் நிறைவேற்றும் அரசுப்பணியாளராக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 1,450 காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த வர்கள், இப்பணிக்கு www.tnrd.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக மட்டும் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து அந்தந்த மாவட்ட அளவில், காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை, தகுதிகள், வயதுவரம்பு ஆகியவற்றுடன் கூடிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.   நவம்பர் 9ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளது.

அதன்பிறகு, நவ. 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, டிச.3ஆம் தேதிக்குள் தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் பட்டியலிடப்படும்.

பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப் பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப் படையில் தகுதி வாய்ந்த தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

டிசம்பர் 16ஆம் தேதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, 17ஆம் தேதி பணி நியமன ஆணைகள் வழங்கும் வகையில் அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. மாவட்ட வாரியாக கடைப் பணியிடங்கள் நாளிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டு நிரப்பப்படும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *