அரசு நிர்வாகத்தை தனிப்பட்ட சொத்தாக மாற்றிவிட்டார் பிரதமர் மோடி காங்கிரஸ் சாடல்

Viduthalai
1 Min Read

புதுடில்லி, மே 18 – ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பு அளிப்பதாக உறுதி அளித்த பிரதமர் மோடி, கடந்த 9 ஆண்டுகளில் 18 கோடி இளை ஞர்களின் கனவுகளை தகர்த்து விட்டார் என்று பிரதமர் மோடி ‘வேலைவாய்ப்பு திருவிழா’ நடத்தியதை கிண்டல் செய்து, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது: 

வேலைவாய்ப்பு திருவிழா’ மூலம் அரசு நிர்வாகத்தை முன்எப்போதும் இல்லாத அளவுக்கு தனிப்பட்ட சொத்தாக பிரதமர் மோடி மாற்றி விட்டார். நிர்வாகத்தை கீழ்நிலைக்கு கொண்டு சென்று விட்டார். இந்த வேலைவாய்ப்புகளை அவரே உருவாக்கியது போலவும், தேர்வு செய்யப் பட்டவர்களுக்கு அவரே ஊதியம் கொடுப்பது போலவும், தேர்வு செய்யப்பட்டவர்கள் தனக்கு மட்டுமே நன்றிக்கடன்பட்டவர்கள் என்று நினைக்க வேண்டும் என்பது போலவும் அவர் நடந்து கொள்கிறார்.ஆனால், அரசு மற்றும் தனி யார் துறையில் லட்சக்கணக்கான வேலை வாய்ப்பு களை அழித்தவரே பிரதமர் மோடிதான் என்பதை வேலை தேடும் இளைஞர்கள் அறி வார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது பதிவில் கூறியிருப்பதாவது:- ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பு அளிப்பதாக உறுதி அளித்த பிரதமர் மோடி, கடந்த 9 ஆண்டுகளில் 18 கோடி இளை ஞர்களின் கனவு களை தகர்த்து விட்டார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *