குமரி மாவட்ட திராவிடர்கழகத்தின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி

1 Min Read

அரசியல்

கன்னியாகுமரியில் பெரியார் நகர் பெயர்ப் பலகை நீண்டகாலமாக இல்லாமல் இருந்தது. உடனே அங்கு பெயர்ப்பலகை அமைக்க வேண்டும் என்று குமரி மாவட்ட கழகம் சார்பாக மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிர மணியம், மாவட்டச் செயலாளர் 

கோ.வெற்றிவேந்தன் ஆகியோர் கன்னியா குமரி சிறப்பு நிலை  பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர். இது தொட‌ர்பாக நாகர்கோவிலில் உள்ள பேரூராட்சி உதவி இயக்குநர கத்திற்கு சென்று உதவி இயக்குநர் மற்றும் உதவி பொறியாளரை மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் கேட்டுக் கொண்டார்.

பேரூராட்சி மன்ற தலைவர் குமரி எஸ் .ஸ்டீபன், வார்டு உறுப்பினர். பூலோக ராஜன் முயற்சியில் பெயர்ப் பலகை புதுப்பிக்கப்பட்டது. இதனை மாவட்ட கழக தலைவர் மா.மு.சுப்பிர மணியம், மாவட்டச் செய லாளர் 

கோ.வெற்றிவேந்தன் , அகஸ்தீஸ் வரம் ஒன்றிய தலைவர் எஸ்.குமாரதாஸ், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் மஞ்சு குமாரதாஸ், கன்னியாகுமரி கிளைக் கழக அமைப் பாளர் க.யுவான்ஸ் ஆகியோர் பார்வை யிட்டு கன்னியாகுமரி பேரூராட்சி மன்றத் தலைவருக்கும், வார்டு உறுப்பி னருக்கும் நன்றி கூறினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *