கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை

கோவை, அக்.21  கோவை அவிநாசி சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கிலோ மீட்டர் தூரத்துக்கு கட்ட ப்பட்ட மேம்பாலம், கடந்த 9ஆம் தேதி மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கப்பட்டது. இந்த மேம் பாலத்தில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே வாகனங்கள் செல்ல வேண்டும், மேம்பாலத்தின் இறங்குதளத்தில் 30 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டுமென காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

இதுதொடர்பான எச்சரிக்கை அறிவிப்புப் பலகைகளும் அங்கு வைக்கப்பட்டுள்ளன. இதையும் மீறி வாகன ஓட்டிகள் வேகமாக சென்று வருகின்றனர். கடந்த வாரம் மேம்பாலத்தில் இருந்து அதிவேகமாக வந்த கார், கீழே இறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதியதில், 3 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து மேம்பாலத்தில் 40 இடங்களில் நவீன கண் காணிப்புக் படக்கருவிகள் பொருத்த காவல்துறையினர் திட்ட மிட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இதுதொடர்பாக சமூக செயல்பாட்டாளரான கோவை சிட்டிசன்ஸ் வாய்ஸ் கிளப் தலைவர் சி.எம்.ஜெயராமன் கூறும்போது, ‘‘ஜி.டி.நாயுடு மேம்பாலத்தின் உப்பிலிபாளையம் – கோல்டுவின்ஸ் ஆகிய இருபுற இடங்களிலும் காவல் துறையினர் ரோந்து வாகனத்தை நிறுத்தி கண்காணிக்க வேண்டும். இறங்குதளங்கள், ஏறுதளங்கள் குறித்த அறிவிப்புப் பலகைகளை 100 மீட்டருக்கு முன்னரே வாகன ஓட்டிகளுக்கு தெரியுமாறு வைக்க வேண்டும். சட்டத்துக்கு உட்பட்டு அங்கு எந்த வகையான வேகத் தடைகளை அமைக்க முடியுமோ, அவற்றை குறிப்பிட்ட துரத்துக்கு அமைக்க வேண்டும். அதேபோல், விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மீட்க மேம்பாலத்தின் இருபுறங்களிலும் ஆம்புலன்ஸ் வாகனத்தை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்’’ என்றார்.

கோவை மாவட்ட ஆட் சியர் பவன்குமார் கிரியப் பனவர் கூறும்போது, ‘‘அவிநாசி சாலை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் இறங் குதளங்களில் ரப்பர் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. போக்கு வரத்து நெரிசலை தவிர்க்க, உப்பிலிபாளை யம் ரவுண்டானா அருகே சிக்னல்கள் அமைக்கப் பட்டுள்ளன. மேம்பாலத்தின் மீது பல்வேறு இடங்களில் ‘ஏஅய்’ தொழில்நுட்ப வசதியுடன் கூடிய சிசிடிவி படக்கருவிகள் பொருத்தப்பட உள்ளன. இதன் மூலம் அதிவேக வாகன ஓட்டிகள், விதிமீறல் வாகன ஓட்டிகள் கண்டறியப்பட்டு, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேம் பாலத்தில் வாகனங்கள் இறங்கும், ஏறும் இடங்களில் அறிவிப்புப் பலகைகளை, குறிப்பிட்ட தூரத்துக்கு முன்னரே பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *