விடுதலை சந்தா

0 Min Read

அரசியல்

கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் திமுக பேரூர் செயலாளர் எஸ்.பிரதாப்சிங் விடுதலை நாளிதழுக்கான சந்தாவினை கழக மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தனிடம் வழங்கினார். புத்தளம்  பேரூர் அலுவல கத்தில் திராவிடர் இயக்க நூலகம் அமைத்துள்ளார்.

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர்,  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடைய நூல்களை தினமும் பொதுமக்கள் ஆர்வமுடன் சென்று படித்து வருகின்றனர்.அவரைப் பாராட்டி பெரியாருடைய நூல்களை வழங்கினார் குமரி மாவட்ட கழக  செயலாளர் கோ.வெற்றி வேந்தன் . உடன் குமரி மாவட்ட கழக இளைஞரணி செயலாளர் எஸ். அலெக்சாண்டர் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *