தமிழ்நாட்டில் புதிதாக 26 இடங்களில் ‘தோழி’ விடுதிகள்

தூத்துக்குடி, அக்.20 தமிழ்நாட்டில் 26 இடங்​களில் மகளிருக்​கான ‘தோழி’ தங்கும் விடு​தி​கள் அமைக்​கப்​பட்டு வரு​வ​தாக சமூகநலன், மகளிர் உரிமைத் துறை அமைச்​சர் பி.கீ​தாஜீவன் தெரி​வித்​தார்.
தூத்​துக்​குடி​யில் செய்​தி​யாளர்​களி டம் அவர் நேற்று (18.10.2025) கூறிய​தாவது: புது​மைப் பெண் திட்​டத்​தின் கீழ் இதுவரை கலை – அறி​வியல், பொறி​யியல், தொழிற்​படிப்​பு, மருத்​து​வப் படிப்பு பயிலும் 5,29,728 மாணவி​கள் பயன் பெற்​றுள்​ளனர். தமிழ்ப் புதல்​வன் திட்​டத்​தின்கீழ் 3,92,449 மாணவர்​கள் பயனடைந்​துள்​ளனர்.
ஊட்​டச்சத்தை உறுதி செய் திட்​டத்​தின் கீழ் கடுமை​யான ஊட்​டச்​சத்து குறை​பாடுடைய 75 ஆயிரம் குழந்​தைகள் கண்​டறியப்​பட்​டு, குழந்​தைகளின் தாய்​மார்​களுக்கு ரூ.22 கோடி யில் ஊட்​டச்​சத்து பெட்​டகங்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன.
தமிழ்நாட்டில் மகளிருக்​கான 6 புதிய ‘தோழி’ தங்​கும் விடு​தி​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. தூத்​துக்​குடி, திருநெல்​வேலி உள்​ளிட்ட இடங்​களில் உள்ள 10 தங்கும் விடு​தி​கள் சீரமைக்​கப்​பட்டு செயல்​பட்டு வரு​கின்​றன. இதுத​விர, ஆதி​தி​ரா​விடர் நலத்துறை​யில் இருந்து பெறப்பட்ட 3 மகளிர் தங்​கும் விடு​தி​களும் சீரமைக்​கப்​பட்டு செயல்​படு​கின்​றன. தற்​போது மொத்​தம் 19 விடு​தி​கள் செயல்​பட்டு வரும் நிலை​யில், புதி​தாக 26 ‘தோழி’ தங்​கும் விடு​தி​கள் கட்​டும் பணிகள் பல்​வேறு நிலைகளில் நடந்து வருகின்​றன.
போக்சோ வழக்​கு​களில் பாதிக்​கப்​பட்ட 6,999 பேருக்கு ரூ.103.63 கோடி நிவாரணம் வழங்​கப்​பட்​டுள்​ளது. முதலமைச்சரின் காலை உணவுத் திட்​டத்​தில் இது​வரை 34,987 பள்​ளி​கள் சேர்க்​கப்​பட்டு 20 லட்​சம் குழந்​தைகளும், அன்​புக் கரங்​கள் திட்​டத்​தின் கீழ் 6,910 குழந்​தைகளும் பயன்​பெற்று வரு​கின்​றனர். இவ்​வாறு அவர் கூறி​னார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *