தமிழவேள் மு. கண்ணபிரான் மறைவு கழகத் தலைவர் ஆசிரியர் நேரில் மரியாதை

1 Min Read

தானும் கல்வி சிறந்து, சமூகமும் கல்வி சிறக்கக் கல்விக் கொடை நல்கிய தகைமைப் பண்பாளர் மு. கண்ணபிரான்   17.10.2025 அன்று மறைவுற்றார். அமெரிக்காவில் உள்ள தோழர் ரவிசங்கர் அவர்களின்  தந்தையார் ஆவார்.

செய்தியறிந்தவுடன் அவரது இல்லத்திற்குச் சென்று அவரது உடலுக்கு கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, கழகப் பொதுச் செயலாளர் வீ .அன்புராஜ், மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். பொருளாளர் வீ .குமரேசன்,  மாநில இளைஞரணி துணை செயலாளர் சோ.சுரேஷ், வடசென்னை மாவட்ட தலைவர் தளபதி பாண்டியன், வடசென்னை மாவட்ட செயலாளர் புரசை அன்புச்செல்வன், அச்சக மேலாளர் க. சரவணன், தோழர்கள் தங்கமணி, தங்க தனலட்சுமி, அரும்பாக்கம் தாமோதரன், லோகபிராம், புளியந்தோப்பு அஸ்வின், கு. அசோக்குமார், வே முத்துராஜ், கே.என். மகேஸ்வரன், க. கலைமணி ஆகியோர் உடன் சென்று இருந்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *