பெரியார் பாலிடெக்னிக்கில் Startup TN – Pre Incubation Centre நிறுவுவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி

1 Min Read

வல்லம், அக்.19-  பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரிக்கு Startup TN – Pre-incubation Centre  நிறுவுவதற்கு தமிழ்நாடு அரசால் அனுமதி வழங்கப்பட்டது.  தமிழ்நாடு அரசுடன் இணைந்து, மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஆலோசனைகள் வழங்குதல் மற்றும் ஊக்குவித்தல், புதிய தொழில்நுட்பங்களை மாணவர்களிடையே அறிமுகப்படுத்தி பயிற்சிப் பட்டறைகள் மூலம் பயிற்சி அளித்தல், புதிய தொழில் முனைவோரை உருவாக்குதல் போன்றவை இத்திட்டத்தின் நோக்கங்கள் ஆகும்.

10.10.2025 அன்று கோயம்புத்தூரில் உள்ள கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் நடைபெற்ற உலகப்  புத்தொழில் மாநாட்டில் (Startup TN Global Startup Summit – 2025) உலகளவில்   புத்தொழில் முனை
வோர் பங்கு கொண்டு கருத்துகளை பகிர்ந்து கொண்டார்கள்.  இவ்விழாவில் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் Pre-incubation Centre  நிறுவுவதற்கு  அனுமதி உத்தரவை தமிழ்நாடு அரசின் மாநில திட்டக்குழுவின் செயல் துணைத்தலைவர் பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் வழங்க இக்கல்லூரியின் சார்பாக இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் துணை
முதல்வர் முனைவர்  ஜி.ரோஜா மற்றும் இயந் திரவியல் துறை பேராசிரியர் கே.கோபி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *