திராவிட மாடல் அரசு ஒடுக்கப்பட்ட பாட்டாளி மக்களுக்கான அரசு தொ.மு.ச. மாநாட்டில் முதலமைச்சர் பேச்சு

Viduthalai
3 Min Read

அரசியல்

சென்னை, மே 19  ஆற்றல் மிக்க அறிவியக்கப் போராளிகளை உருவாக்கும் அமைப்பாக தொடர்ந்து தொமுச செயல்பட வேண்டும் என்று தொமுச மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையின் 25-ஆவது பொதுக்குழு மற்றும் பொன்விழா மாநாட்டின் நிறைவு நாள் (18.5.2023) நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய தாவது:

திமுக, உழைக்கும் அடித்தட்டு மக்களுக்காக பாடுபடும் இயக்கமாக உள்ளது. ஜாதிய ரீதியாக அடக்கப்பட்ட மக்கள், திமுகவில் தனித்தனியாக இயங்கி வந்த சங்கங்களைஇணைத்து மத்திய சங்கமாக உருவாக்கியவர் மறைந்த மேனாள் முதலமைச்சர் கலை ஞர்தான். அதற் கான குழு அமைத்து அக்குழு பரிந்துரையின் பேரில்தான் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை என்ற அமைப்பு 1970இ-ல் உருவானது. கடந்த 2001 முதல் தொமுச.வில் மு.சண்முகம் பொதுச்செயலாளராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். சண்முகம் உள்ளிட்டோரின் செயல் பாட்டால்தான் 2008ஆ-ம் ஆண்டு தொமுச பேரவைக்கு ஒன்றிய அரசின் அங்கீகாரம் கிடைத்தது. தொமுச பேரவை நடவடிக்கையால் 19 மாநிலங் களில் இணைப்பு சங்கங்கள் உருவாகி யுள்ளன. ஒடிசாவில் 40 சங்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அம்மாநில அரசுசிறந்த தொழிற்சங்கமாக தொமுசவை தேர்வு செய்து பரிசு வழங்கியுள்ளது. 

தொழிலாளர் நலன் மீது கவனம்

1969ஆ-ம் ஆண்டு கலைஞர் முதலமைச்சராக பொறுப்பேற்றதும், தொழிலாளர் மீது தனி கவனம்செலுத்தி, தொழிலாளர் நலத்துறையை தனியாக பிரித்து, தனிஅமைச்சகத்தை உருவாக் கினார். அதே ஆண்டு மே 1-ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை நடைமுறைப்படுத்தியது கலைஞரின் சாதனை. பல தொழிற்சாலைகளுக்கு குறைந்தபட்ச ஊதியம்பெறச் செய்தார். தொழிலாளர்களுக்கு பணிக்கொடை திட்டத்தையும், தொழில் விபத்து நிவாரண திட்டத்தையும் அறிமுகப் படுத்தினார். கட்டுமான தொழிலாளர் நலவாரியத்துடன், விவசாய தொழி லாளர், மீனவர், கிராம கோயில் பூசாரிகள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோரை சேர்த்து 36 அமைப்பு சாரா நலவாரியங்களை உருவாக்கியதும் திமுகவின் சாதனைதான்.

திமுக ஆட்சியில்தான் உடல் உழைப்பு தொழிலாளர் சட்டப்பிரிவில், பல வாரியங்கள் உருவாக்கப் பட்டன. போக்குவரத்து ஓய்வூதியம், பஞ்சப்படி வழங்கப்பட்டது. மின் வாரிய  ஒப்பந்த தொழிலாளர்கள், சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கும் பணி நிரந்தரம் தந்தது திமுக அரசுதான். குறைந்த பட்ச போனஸ் 8.3 சதவீதம், அதிகபட்சம் 20 சதவீதம் என ஒன்றிய அரசை அறிவிக்கச்செய்தது கலைஞர் தான். அந்த வழியில்தான், திராவிட மாடல் அரசும் செயல்பட்டு வருகிறது. தொழிலாளர் நலவாரியங் களில் கடந்த அதிமுக அரசு விட்டுச் சென்ற ஒரு லட்சம் மனுக்களுக்கு தீர்வுகாணப்பட்டு, 6.71 லட்சம் பேருக்கு நலத்திட்ட உத விகள் வழங்கப்பட் டுள்ளன. தற்போது, கடை, நிறுவனங் களில் இருக்கை வசதி ஏற்படுத்த சட்டத்திருத்தம் செய்யப்பட் டுள்ளது. போக்குவரத்து தொழிலாளர் களுக்கு ஊதிய முரண்பாடுகள் களைந்து ஊதிய உயர்வு வழங்கப் பட்டுள்ளது. இந்த பேரவை அமைப்பில் தான் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் ஜனநாயக முறைப்படி நடை பெறுகிறது.

தொழிலாளர் தோழர்கள் தங்கள்உழைப்புடன் சேர்த்து உடல் நலத்திலும் அக்கறை செலுத்துங்கள். உங்கள் குடும்பத்தை நன்கு கவனியுங்கள். குழந்தைகளை நன்கு படிக்க வையுங்கள். அதுதான் அவர்களுக்கு நீங்கள் தர வேண்டிய மாபெரும் சொத்து. நம் அரசு, தொழிலாளர் நலன் காக்க செய்துள்ள திட்டங்கள், சாதனைகளை அனைத்து தொழிலாளர்களிடமும் கொண்டு சேர்க்கும் பொறுப்பும், கடமையும் தொமுச தோழர்களிடம் தான் உள்ளது என்பதை மறந்து விடாதீர்கள். ஆற்றல் மிக்க அறிவியக்கப் போராளிகளை உருவாக்கும் அமைப்பாக தொடர்ந்து செயல்பட வேண்டும். உங்களின் ஒருவனாக என் றைக்கும் நான் இருப்பேன்.

 இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *