வீராங்கனை – கொள்கை சகோதரி க. பார்வதி மறைந்தாரே!

1 Min Read

 திராவிடர் கழக மகளிரணி மேனாள் மாநில செயலாளர் மானமிகு க.பார்வதிக்கு வீர வணக்கம்! வீர வணக்கம்!

இரங்கல் அறிக்கை

திராவிடர் கழக மகளிரணியின் மேனாள் மாநிலச் செயலாளர் சகோதரி மானமிகு க.பார்வதி (வயது 77) அவர்கள் நேற்று இரவு  (8.11.2023) அவரது மகன் இல்லத்தில் மறைவுற்றார் என் பதை அறிவிக்கப் பெரிதும் வருந்துகிறோம்.

50 ஆண்டுகளுக்கு மேலாகக் கழக வீராங்கனையாக, கழகம் நடத்திய அத்தனைப் போராட் டங்களிலும் தவறாமல் பங்கேற் றவர் – சிறை ஏகியவர்!

தமிழ்நாடு முழுவதும் சக மகளிரணி பொறுப் பாளர்களுடன் சுற்றிச் சுற்றி வந்து கழக மகளிரணியை மாவட்டம் தோறும் அமைத்ததில் அவரின் பங்கு மகத்தானது!

அவரது வாழ்விணையர் கணேசன் (மறைவு) அவர்களுடன் இணைந்தும் ஓய்வில்லாமல் கழகப் பணியே தன் உயிர் மூச்சாகக் கொண்டு உழைத்த ஒப்பற்ற ஒரு சகோதரியை கழகம் இழந்து தவிக்கிறது!

தன் பிள்ளைகளுக்கெல்லாம் ஜாதி மறுப்புத் திருமணங்களை நடத்திக் காட்டிய கொள்கை வீராங்கனை!

தனது மரணத்திற்குப் பின் விழிக்கொடை வழங்கப்பட்ட நிலையில் சென்னை பெரியார் திடலில் தன் உடலைக் கொண்டு சென்று, அங்கு சில மணி நேரம் வைத்து,   மருத்துவமனையில் தனது உடலையும்  கொடையாக ஒப்படைக்க  வேண்டும் என்றும், உடலுக்கு மாலை ஏதும் அணிவிக்காமல் உண்டியல் வைத்து, மாலைக் குப் பதில் பணம் போட்டு, அந்தத் தொகையைப் பெரியார் உலகத்திற்கு ஒப்படைக்க வேண்டும் என்றும் மரணத்திலும் தனது கொள்கை முத்திரையைப் பொறித்தவர்.

அவர் இழப்பு அவர்தம் குருதிக் குடும்பத் தினருக்கு மட்டுமல்ல; கழகக் கொள்கைக் குடும்பத்திற்கே ஏற்பட்ட பேரிழப்பாகும்.

அவரின் அளப்பரிய கழகத் தொண்டுக்குக் கழகத்தின் சார்பில் வீர வணக்கம் செலுத் துகிறோம். அவர் மறைவால் துயருறும் குடும்பத் தினருக்கும்,  கழகத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி

தலைவர், 

திராவிடர் கழகம்

சென்னை
9.11.2023 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *