7.9 லட்சம் இந்தியர்களிடம் தலா ரூ.8.2 கோடி சொத்து

1 Min Read

 புதுடில்லி, மே 19  லண்டனை தலைமையிடமாகக் கொண்ட நைட் பிராங்க் நிறுவனம், உலகளாவிய பெரும் பணக்காரர்கள் தொடர்பான விவரங்களை வெளியிட்டுள்ளது. அந்நிறுவனத்தின் அறிக்கையின்படி, இந்தியாவில் 1 மில்லியன் டாலருக்கு (ரூ.8.2 கோடி) மேல் சொத்து மதிப்பு கொண்டவர்களின் எண்ணிக்கை 7,97,714 ஆக உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 17 லட்சமாக உயரும் என்று அந்த ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது. 30 மில்லியன் டாலருக்கு (ரூ.25 கோடி) மேல் சொத்து மதிப்புக் கொண்டவர்களின் எண்ணிக்கை 12,069 ஆக உள்ளது. 2027-ல் இது 19,119 ஆக உயரும். அதேபோல், 1 பில்லியன் டாலர் (ரூ.8,200 கோடி) சொத்து மதிப்புக் கொண்டவர்களின் எண்ணிக்கை தற்போது 161 ஆக உள்ளது. 

இது அடுத்த 5 ஆண்டுகளில் 195 ஆக உயரும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைட் பிராங்க் நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சிசிர்பைஜால் கூறுகையில், “ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சியில் இந்தியா உலக அளவில் முக்கிய இடம் வகிக்கிறது. இதனால், அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும்” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *