மூடத்தனத்தால் வந்த வினை அறுபதாம் கல்யாணம் செய்ய கோயிலுக்குச் சென்ற கணவன் மனைவி விபத்தில் மரணம்

தஞ்சாவூர் அக்.18-  பொள்ளாச்சியைச் சேர்ந்த தம்பதியினர் ஒரு காரில் தங்களுடைய 60ஆம் திருமணத்திற்காக திருக்கடையூருக்கு சென்று கொண்டிருந்தனர். கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 60) அவரது மனைவி கலாவதி(59) உள்ளிட்ட 5 பேர் நேற்று (17.10.2025) அதிகாலை ஒரு காரில் தங்களுடைய 60ஆம் திருமணத்திற்காக திருக்கடையூருக்கு சென்று கொண்டிருந்தனர். தஞ்சாவூர் மாவட் டம், திருவிடைமருதூர் வட்டத்தில் உள்ள நரசிங்கன்பேட்டை அருகே இவர்களுடைய கார் சென்றபோது எதிரே வந்த லாரியோடு நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் சுப்பிரமணியன், கலாவதி தம்பதியினர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கார் ஓட்டுநர் உள்பட 3 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து சம்பந்தப்பட்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைப்பு

சென்னை, அக்.18- தமிழ்நாடு சட்​டப்​பேர​வைக் கூட்​டம் கடந்த அக்​.14ஆம் தேதி தொடங்கி முதல்​நாளில் மறைந்த உறுப்​பினர்​களுக்கு இரங்​கல் குறிப்​பு, கரூர் சம்​பவத்​தில் இறந்த 41 பேர் மறைவுக்கு இரங்​கல் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்டு அவை ஒத்​தி
வைக்​கப்​பட்​டது. அக்​.15ஆம் தேதி இந்த நிதி​யாண்​டுக்​கான முதல் துணை நிதிநிலை அறிக்கை தாக்​கல் செய்​யப்​பட்​டது. 17.10.2025 அன்று பேரவை மீண்​டும் கூடும் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்​தி வைப்​ப​தற்​கான தீர்​மானத்​தை, அவை முன்​னவர் துரை​முரு​கன் கொண்டு வந்​து, குரல் வாக்​கெடுப்பு மூலம் நிறைவேற்​றப்​பட்​டது. இதையடுத்​து, பேரவை மீண்​டும் கூடும் தேதி அறிவிக்​கப்​ப​டா​மல் ஒத்​திவைக்​கப்​படு​வ​தாக பேர​வைத் தலை​வர் மு.அப்​பாவு அறி​வித்​தார்​.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *