தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மாணவிகளுக்கு “அய்ரோப்பாவில் பெரியார்” என்ற புத்தகத்தை வழங்கினார்

1 Min Read

அரசியல்

சென்னை தியாகராயர் நகரில் உள்ள குண்டூர் சுப்பையா பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த 8 மாணவிகள் பொ.சாருமதி, இரா.அபி, ச.இந்து பிரியா, சா. காவியா, ஆ.மு.பிரியவர்ஷினி, இர.தாரிகா, கி.மஞ்சு, பி.பவதாரணி ஆகியோர் ரஷ்யாவிற்கு அறிவியல் சுற்றுலா மற்றும் விண்வெளி மய்யத்தை பார்வையிட தேர்வு செய்யப்பட்டதை முன்னிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மாணவிகளுக்கு “அய்ரோப்பாவில் பெரியார்” என்ற புத்தகத்தை வழங்கினார். செ.தெ.நாயகம் மேல்நிலைப்பள்ளி மேனாள் மாணவர் ராஜசேகரன் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தார். வே.பூங்கொடி, தீ.கல்யாணசுந்தரம், மேனாள் மாணவர் பத்திரிகையாளர்  தினேஷ்குமார்  ஆகியோர் உடன் இருந்தனர். (18.5.2023, பெரியார் திடல்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *