மேனாள் கழகப் பொருளாளர் கோ. சாமிதுரை நினைவைப் போற்றுவோம்

0 Min Read

இரங்கல் அறிக்கை

மாணவப் பருவம் தொட்டு திராவிடர் கழகத்தில் ஈடுபட்டு, பிறகு வழக்குரைஞராக பொருளீட்டும் தொழில் நிலையிலும் இயக்கத் திற்கும், நமக்கும் உதவிட, தனது தொழிலைத் துறந்து, சென்னைக்கே குடிபெயர்ந்து, பல பொறுப் புகளை வகித்து, இறுதியில் கழகப் பொரு ளாளராகி சில ஆண்டுகள் தொண்டூழியம் புரிந்த மானமிகு சகோதரர் கல்லக்குறிச்சி கோ. சாமிதுரை அவர்களது 10ஆம் ஆண்டு நினைவு நாள் (9.11.2023) இன்று!என்றென்றும் நமது நினைவில் நிலைத்தவர் கழகப் பொருளாளர். அதில் குறிப்பாக கோ.சாமிதுரை முக்கியமானவர். நினைவைப் போற்றுவோம்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை
9.11.2023 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *