ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

Viduthalai
1 Min Read

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 19.5.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* கருநாடக மாநிலத்தில் அடுத்த முதலமைச்சர் யார் என்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சியில் நான்கு நாட்களாக நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்தது. முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவ குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி தலைமை அதிகார பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் 20,.5.2023 புதிய முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்றுக் கொள்கிறார். 

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

* ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவிடம் இருந்து சட்டத்துறை இலாகா பறிப்பு.  மேக்வாலுக்கு கூடுதல் பொறுப்பு; இணை அமைச்சரும் மாற்றம்.

* தமிழ்நாட்டில் நடத்தப்படும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை என உச்ச நீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பிறப்பித்த அவசர சட்டம் செல்லும் என்று தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர். 

டைம்ஸ் ஆப் இந்தியா:

* 12 துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் 20 தனியார் துறை வல்லுநர்களை இணைச் செயலாளர்கள், இயக்குநர் கள் மற்றும் துணைச் செயலாளர்களாக நியமிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நியமனங்களில் எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீடு கிடையாது.

– குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *