வீட்டு வசதி வாரிய மனைகளுக்கு தடையில்லாச் சான்று அமைச்சர் முத்துசாமி உறுதி

சென்னை, அக்.16  தமிழ்நாடு முழுவதும் வீட்டுவசதி வாரியத்திடம் பெற்ற வீட்டு மனைகளுக்கு தடை யில்லாச் சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

இது தொடர்பாக சட்டப் பேரவையில் நேற்று (15.10.2025) வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி கூறியதாவது: விருகம்பாக்கம் தொகுதி 136-ஆவது வார்டில் அரசு அலுவலர் வாடகை குடியிருப்பு கட்டப்பட்டது. அது சேதமடைந்ததால் தற்போது இடிக்கப்பட்டுவிட்டது. அந்த இடம் அரசு புறம்போக்கு என குறிப்பிடப்பட்டுள்ளது. சிஎம்டிஏவில் குடியிருப்பு பகுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. 2013-இல் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படும் என ஒரு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, அப்பகுதியில் புதிய வணிக வளாகம் கட்டுவது கேள்விக்குறிதான். இருப்பினும், ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கெனவே வாடகைக்கு குடியிருப்பவர்கள் அதை சொந்தமாக்கிக் கொள்ள விரும்பினால், அதற்கான வழி முறைகளை பின்பற்றி, சட்டச் சிக்கல் வராத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

தடையில்லா சான்று

வாரியத்திடம் வீட்டுமனை பெற்றவர்களுக்கு தடையில்லாச் சான்று வழங்கப்படாதது, கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாடு முழுவதும் இருக்கும் பிரச்சினை. இதை முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். அதற்கு முதலமைச்சர், ‘‘சிறு தவறும் நேராத வகையில், எல்லோருக்கும் ஒரேமாதிரியாக தீர்வு காண வேண்டும்’’ என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு துணை முதலமைச்சர் உதயநிதியிடம் அறிவுறுத்தியுள்ளார். அதன்பிறகு, 2 மேனாள் அய்ஏஎஸ் அதி காரிகள் கொண்ட குழு அமைக் கப்பட்டுள்ளது. அந்த குழு நவம்பர் இறுதியில் வழங்க உள்ள அறிக்கையின் பரிந்துரைப்படி, மனை உரிமையாளர்களுக்கு தடையில்லாச் சான்று வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *