முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலைத்தள பதிவு
சென்னை, அக்.16– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:-
கரூரில் நிகழ்ந்த பெருந்துயரம் தொடர்பாக எந்த ஒரு தனி நபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை. எனினும், திட்டமிட்டு அரசு மீது பொய்களைச் சிலர் பரப்பும்போது, நடந்த உண்மையை விளக்கவேண்டியது கடமையாகிறது.
இனி இப்படி நிகழாமல் தடுப்பதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வகுத்து வருகிறது. உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். அனைத்தையும் விட மனித உயிர்களே விலைமதிப்பற்றது என்ற பொறுப்புணர்வுடன் அனைத்துத் தரப்பினரும் செயல்படுவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.