நூல் அரங்கம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

நூல்:“விலங்குகளும் பாலினமும்“ 

ஆசிரியர்: நாராயணி சுப்ரமணியன் 

வெளியீடு: ஹெர் ஸ்டோரிஸ், சென்னை

விலை: 170/- 

 பக்கங்கள் : 135

அரசியல்

‘விலங்குகளும் பாலினமும்’ நூலில் நவீன விலங்குகள் ஆய்வு குறித்து என்ன கூறுகிறது என்பதைக் சுவைபட இந்த நூலில் நாராயணி சுப்ரமணியன் விளக்கி கூறியுள்ளார்.

தாய்மை – குழந்தைகளைக் கண்ணும் கருத்துமாகப் பேணுதல் பெண்களின் பொறுப்பு என ஒதுக்கி வைக்கப்பட்ட வேலையை ஓர் ஆண் விலங்கு செய்கிறது…. அது என்ன விலங்கு?

ஆண் – பெண் என்ற இறுக்கமான பால் இருமைகளுக்கு அப்பால் உள்ள பால் வகைகள், எந்த விலங்குகளில் இப்படி உள்ளது? அவை இனப்பெருக்கம் செய்வது எப்படி?

இப்படிப் பல கேள்விகளை எழுப்பி நமது ஆர்வத்தைத் தூண்டி ஆழமான சிந்தனையை அற்புதமாக விதைத்துச் செல்கிறார். அறிவுக்கண் திறந்து வெறுப்பை  அழித்து, அன்பை விதைக்கும் நூல்.

எப்படிப் பார்த்தாலும், மனித இனத்தின் பார்வையிலிருந்து நாம் சொல்லும் ‘பாலினம்‘ என்பதற்கும் விலங்குகளின் பால் சார்ந்த சமூகப் பங்களிப்புக்கும் மலையளவு வித்தியாசம் உண்டு. எல்லா பெண் விலங்குகளும் சற்றே நாணத்துடன் அமைதியாகவும் தாயன்பின் ஊற்றாகவும் நடந்து கொள்வதில்லை.  ஆண் விலங்குகள் எல்லாம் மூர்க்கமானவையும் அல்ல. பிரசவித்து பிள்ளை பெறும் ஆண் விலங்குகள், ஆண்பாலே இல்லாமல் பெண்கள் மட்டுமே கொண்ட விலங்குகள் உடலளவில் பெரிய பெண்களைக் கொண்ட விலங்கினங்கள் பெண் வழி சமூகமாக இயங்கும் விலங்குக் கூட்டங்கள் என்று விலங்கியல் உலகில் பல்வேறு பாலின நெகிழ் தன்மைகள் உண்டு.

விலங்குகளின் உலகைக் கூர்ந்து கவனித்தால், பாலினம் பற்றிய மனிதர்களில் கட்டமைப்புகளை இன்னும் துல்லியமாகப் புரிந்து கொள்ளலாம்.

– அய்வன்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *