பூவிருந்தவல்லி, அக்.15- 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் வாலிபருக்கு 28 ½ ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவள் ளூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
சிறுமி பாலியல் வன்கொடுமை
பூவிருந்தவல்லியை அடுத்த திருமழிசை பகுதியை சேர்ந்தவர் அன்பு என்கிற அன்பழகன் (வயது 30). இவர் கடந்த 2016ஆம் ஆண்டு 16 வயது சிறுமியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமைசெய்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமியின் பாட்டி திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அன்பு என்கிற அன்பழகனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை ‘திருவள்ளூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கரைஞர் விஜயலட்சுமி ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி உமா மகேஸ்வரி குற்றம் நிரூபிக்கப்பட்டதாக கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அன்பு என்கிற அன்பழகனுக்கு 28 ½ ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.28 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசுத் தரப்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதனையடுத்து திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் அன்பழகனை புழல் சிறையில் அடைத்தனர்.