அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு

Viduthalai
1 Min Read

அரசியல்

சென்னை, மே 20- தமிழ் நாட்டில் கல்லூரி கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங் குகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் ஒரு லட்சத்து 7,395 இடங்கள் உள்ளன. 

இவற்றில் மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப் பப் பதிவு கடந்த மே 8ஆம் தேதி தொடங்கி 19.5.2023 நிறைவு பெற் றது.

சுமார் 2.8 லட்சம் மாணவர்கள் இதுவரை விண்ணப் பித்திருந்தனர். எனினும், அதில் பெரும் பாலான மாணவர்கள் கட்டணம் செலுத்தாமல் உள்ளதாக கூறப்படு கிறது. இதையடுத்து மாணவர் கள் நலன்கருதி விண்ணப்பப் பதிவுக் கான அவகாசம் மே 22ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

எனவே, விருப்பமுள் ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி https://www.tngasa.in/ எனும் இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண் டும்.

விண்ணப்பிக்கும் வழிமுறைகள், கட்ட ணம் உள்பட கூடுதல் விவரங்களை மேற் கண்ட வலைதளத்தில் அறிந்து கொள்ள லாம் என்று கல்லூரிக் கல்வி இயக்குநரகம் தகவல் தெரிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *