”இதுதான் ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி ஆட்சி இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி” தொடர் பரப்புரைக் கூட்டம் திருநெல்வேலி மாவட்டக் கலந்துரையாடலில் முடிவு

1 Min Read

களக்காடு, அக். 13- திருநெல்வேலி மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 11.10.2025 அன்று மாலை 6 மணிக்கு மாவட்டத் தலைவர் ச.இராசேந்திரன் தலைமையில் நடை பெற்றது. மாநில ஒருங் கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தொடக்கவுரையாற்றினார்.

மாவட்டச் செயலாளர் இரா.வேல்முருகன் செய லாக்கவுரை வழங்கினார். மாவட்ட கழக காப்பாளர் இரா.காசி, மாவட்ட துணைச் செயலாளர் மாரி.கணேசு, மாநகர செயலாளர்  வெயிலுமுத்து, மாவட்ட இளைஞரணித் தலைவர் ஆ.வீரபாண்டிய கட்டபொம்மன் தச்சை பகுதி தலைவர் இரா.கருணாநதி ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.

28.10.2025 அன்று  களக்காடு வருகைதரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குச் சிறப்பான வரவேற்பு அளிப்பது எனவும், ‘இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பிஜேபிஆட்சி, ‘இதுதான் திராவிடம் திராவிடமாடல் ஆட்சி’ என்ற தலைப்பில் தொடர் பரப்புரைக் கூட்டத்தை எழுச்சியோடு நடத்துவது என்றும், பெரியார் உலகத்திற்கு ரூ.10 இலட்சம் நிதி வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

முத்துராமன் நன்றிகூற கூட்டம் நிறைவுபெற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *