மறைவு

1 Min Read

அரசியல்

கிருட்டினகிரி மாவட்ட கழக மேனாள் தலைவரும், மேனாள் தலைமை செயற்குழு உறுப் பினருமான காவேரிப் பட்டணம் சுயமரியாதைச் சுடரொளி தா. திருப்பதியின் மூத்த மகன், பணி நிறைவு பெற்ற கிருட்டினகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை (ஆர்.எம்.ஒ.) மக்கள் மருத்துவர் தி.வள்ளல் (வயது 65) சிறிது காலம் உடல் நலம் பாதிக்கப்பட்டு 19.5.2023 மாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். 

அன்னாரது உடல் காவேரிப்பட்டணம் வி. எஸ். கே. என். நகர் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு இன்று (20.5.2023) பிற்பகல் தேவர்முக்குளம்  அவரது தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. கிருட்டினகிரி மாவட்ட திரா விடர் கழகம் சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *