தருமபுரி, அக்.12- தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 10.10.2025 அன்று இரவு 28 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, 11.10.2025 அன்று மாலை 6 மணிக்கு 57 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. நீர்வரத்து உயர்வால் காவிரி ஆறு செந்நிறத்தில் ஆர்ப்பரித்து ஓடுகிறது. முக்கிய அருவி மற்றும் தொங்கு பாலம் ஆகிய இடங்களுக்கு செல்லும் நடைபாதையும் தண்ணீரில் மூழ்கியது. நீர்வரத்து அதிகரிப்பால், ஒகேனக்கல் ஆற்றிலும் அருவிகளிலும் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. கருநாடகா வனப்பகுதிகளில் பெய்த கனமழையே நீர்வரத்து உயர்வுக்கு காரணம் என நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வெள்ளப்பெருக்கு காரணமாக தருமபுரி மாவட்ட காவிரியின் கரையோரப் பகுதிகளை வனம், வருவாய் உள்ளிட்ட அரசுத் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதற்கிடையே, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. விநாடிக்கு 6,033 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று (11.10.2025) 29,540 கனஅடியாக அதி
கரித்தது.
நீர் வெளியேற்றம்: காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 12,000 கன அடியும், கிழக்கு, மேற்கு வாய்க்கால் பாசனத்துக்கு 500 கனஅடியும் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
காவிரி வெள்ளம்: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து உயர்வு; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Leave a Comment