பெரியார் உலகத்திற்கு ரூ.10 இலட்சம் வழங்க தென்காசி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு!

கீழப்பாவூர், அக். 12- மாவட்டக் கழக கலந்துறவாடல் கூட்டத்திற்கு நேற்று (11.10.2025) காலை 11 மணிக்கு கீழப்பாவூர் பெரியார் திடலில் நடைபெற்றது

மாவட்ட கழக காப்பாளர் சீ.டேவிட்செல்லத்துரை தலைமை யேற்று தந்தை பெரியாரின் கொள்கை சிறப்பினையும், அன்னை மணியம்மையாரின் தொண்டறத்தையும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அளப்பரிய தொண்டால் ஏற்பட்டுள்ள பயன்பாடுகளை விளக்கியும், பெரியார் உலகத்திற்கு ஒவ்வொருவரும்,நிதிதரட்டி அளிக்க வேண்டிய அவசியத்தை விளக்கி யும்உருக்கமாக உரையாற்றினார்.

மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தொடக்கவுரையாற்றினார். மாநில ப.க.துணைத்தலைவர் கே.டி.சி.குருசாமி, பொதுக்குழு உறுப்பினர் அய்.இராமச்சந்திரன், மாவட்டத்தலைவர் வழக்கறிஞர் த.வீரன், மாவட்டச் செயலாளர் கை.சண்முகம், மாவட்டத் துணைத்தலைவர் செந்தில்குமார், மாவட்ட துணைச் செயலாளர் அ.சவுந்தரபாண்டியன், கீழப்பாவூர் கழகத் தலைவர் இராமசாமி, ஆலங்குளம் கழக பொறுப்பாளர்கள் பெரியார் குமார், செல்வமணி, மேலமெஞ்ஞானபுரம் தங்கராசு, கீழப்பாவூர் இல.அன் பழகன்,ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.

28.10.2025 அன்று தென்காசி வருகைதரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு ஆலங்குளத் தில் சிறப்பான வரவேற்பு அளிப்ப தென தீர்மானிக்கப்பட்டது.

28.10.2025 அன்று காலை 10.30மணிக்கு தென்காசி சிவந்தி நகர் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெறும் பெரியார் உலகம் நிதியளிப்பு விழாவில் தென்காசி மாவட்டக்கழகம்சார்பில் ரூ.10.-இலட்சம் நிதிதிதிரட்டி அளிப்பதென தீர்மானிக்கப்பட்டது.

நிறைவாக பி.விஜி நன்றி கூற கலந்துரையாடல் கூடடம் நிறைவு பெற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *