தொழில் முனைவோர்களின் முதலீட்டை அதிகரிக்க நிதி சேவை

Viduthalai
1 Min Read

சென்னை, மே 21 – தொழில் முனைவோர்களுக்கு சாத்தியமுள்ள வருவாய் வளர்ச்சியிலிருந்தும் மற்றும் மதிப்பீடை மறுதர நிலை செய்வதனால் கிடைக்கிற ஆதாயத்தைப் பெறுவதை நோக்கமாகக் கொண்ட பரோடா பி.என்.பி.பரிபாஸ் மியூச்சுவல் ஃபண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நீண்டகால நோக்கில் முதலீடு செய்யும் நபர்களுக்கு சொத்து உருவாக்கம் செய்வதை இந்த ஃபண்ட் இலக்காகக் கொண்டிருக்கிறது.

ஒழுங்கு முறையிலான கட்டமைப்பு, அனுபவமிக்க நிபுணத்துவ குழு மற்றும் வலுவான செயல்முறைகள் ஆகியவற்றின் ஆதரவோடு கூடிய மிகச் சிறப்பான முதலீட்டு சேவையை இது கொண்டுள்ளது. மே 17 அன்று தொடங்கி, மே 31ஆம் தேதி முடிவுக்கு வரும் இந்த பங்குகள், துறைகள் மற்றும் சந்தை மூலதன முதலீடுகள் என பலவற்றில் இருக்கக்கூடும் என இந்நிறுவன தலைமை செயல் அலுவலர் சுரேஷ் சோனி தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *