சென்னை, அக்.11-
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை வரும் 16 முதல் 18ஆம் தேதிக்குள் தொடங்க வாய்ப்புள்ளது. இன்று நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு ள்ளதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை
இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்மேற்குப் பருவமழை வரும் 16 முதல் 18ஆம் தேதிகளில் விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. அதேநேரத்தில், வளிமண்டல கீழடுக்கு களில் கிழக்கு மற்றும் வடகிழக்கு திசைக் காற்று வீசக்கூடிய நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை வரும் 16 முதல் 18ஆம் தேதிக்குள் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
வட தமிழ்நாடு கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
வடக்கு ஆந்திரா மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் பெரும்பா லான இடங்களி லும், வரும் 12 முதல் 16ஆம் தேதி வரை சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கன
மழை பெய்ய வாய்ப்புள் ளது.
தென் தமிழ்நாடு கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதை யொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.