கருநாடகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம்! தெற்கில் ஏற்படுத்தப்பட்டுள்ள விடியல்-இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் பரவ வேண்டும்! தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

1 Min Read

அரசு, தமிழ்நாடு

சென்னை, மே 21- கருநாடக மாநில முதலமைச்சராக இரண்டாவது முறையாக நேற்று (20.5.2023) சித்த ராமையா பதவி ஏற்றுக் கொண்டார். 

பெங்களூருவில் உள்ள கண்டீரவா மைதா னத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் இரண்டாவது முறையாக கருநாடக முதலமைச்ச ராக சித்தராமையா பொறுப்பேற்றுக் கொண் டார். ஆளுநர் தவார் சந்த் கெலாட் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். தொடர்ந்து துணை முதலமைச்சராக டி.கே. சிவகுமாரும், 8 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

கருநாடக முதலமைச்சர் மற்றும் துணை முத லமைச்சராக பொறுப் பேற்றுள்ள இருவருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து களை தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் டிவிட்டர் பக்கத் தில் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், 

மதச்சார் பின்மை யைப் போற்றும் இவ்விரு வரும் தங்கள் திறமை யான ஆட்சி நிர்வாகத் தால் கருநாடக மாநிலத் தைப் புதிய உயரங்களுக்கு இட்டுச் செல்வார்கள் என உளமார நான் நம்புகிறேன்.

தெற்கில் ஏற்படுத்தப் பட்டுள்ள இந்த விடியலா னது இந்தியாவின் மற்றப் பகுதிகளுக்கும் பரவ வேண்டும். அத்தகைய மாற்றத்தை முன்னறிவிக் கும் மணியோசைதான் பெங்களூரில் நடை பெற்ற பதவியேற்பு விழா! என்று பதிவிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *