சென்னை, அக்.11- சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் 10 மாதக் குழந்தையின் நுரையீரல் பாதைக்குள் சிக்கிய மூக்குத்தியை 2 சிகிச்சைகள் மூலம் மருத்துவர்கள் வெளியே எடுத்தனர்.
நுரையீரல் பாதைக்குள் மூக்குத்தி
இது தொடர்பாக சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் லட்சுமி கூறியதாவது: காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 10 மாதக் குழந்தையானது தனது தாயின் மூக்குத்தியை கடித்து விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது தவறுதலாக அந்த மூக்குத்தி சுவாசப் பாதைக்குள் சென்றுவிட்டது. குழந்தையின் இடது பக்க நுரையீரல் சுவாசப் பாதையின் அடிப்பகுதியில் மூக்குத்தி சிக்கிக் கொண்டுள்ளது.
சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கடந்த 6ஆம் தேதி குழந்தை அழைத்து வரப்பட்டது. மருத்துவமனையின் நுரையீரல் சிறப்பு மருத்துவர் சரத் பாலாஜி, காது – மூக்கு – தொண்டை சிகிச்சை மருத்துவர் மேஜர் ஜெ.நிர்மல்குமார், மயக்கவியல் மருத்து வர் தனலட்சுமி ஆகி யோர் கொண்ட குழுவினர் குழந்தைக்கு சிகிச்சையளித்தனர். வளையும் தன்மையுடன் கூடிய குழாயை குழந்தையின் சுவாசப் பாதையில் நுரையீரல் மருத் துவர்கள் செலுத்தினர். நுரையீரலின் கீழ் சுவாசப் பாதையில் இருந்த அந்த மூக்குத்தியை, அங்கிருந்து மேல் பகுதிக்கு நகர்த்திக் கொண்டு வந்து, ரிஜிட் ப்ராங்கோஸ்கோப்பி எனப்படும் ஊடுகுழாயை செலுத்தி மூக்குத்தியை வெளியே எடுத்தனர். இந்த சிகிச்சையின்போது குழந்தைக்கு தொடர்ந்து மயக்க மருந்து சிகிச்சை வழங்கப்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த குழந்தை, இந்த இருவேறு ப்ராங்கோஸ்கோபி சிகிச்சைகள் மூலம் நலமு டன் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.