கோவை – அவினாசி சாலை மேம்பாலம் தமிழ்நாடு அரசின் நிதியிலிருந்து கட்டப்பட்டது: அரசு விளக்கம்!

சென்னை, அக்.11 கோவை– அவி னாசி சாலையில் கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 10.1 கிலோமீட்டர் நீளத்துக்கு தமிழ்நாட்டின் மிக நீளமான மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஜி.டி.நாயுடு பெயரிலான அந்த உயர்மட்ட சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 9.10.2025 அன்று திறந்து வைத்தார். இந்த நிலையில், ‘‘தமிழ்நாட்டில் மிக நீளமான பாலத்தை கோவை மக்களின் போக்குவரத்தை எளிமையாக்கித் தந்த பிரதமர் மோடிக்கு நன்றி’’ என்று கூறி, உயர்மட்ட சாலை ஒன்றிய அரசின் நிதியில் கட்டப்பட்டதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்து வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

கோவை மாநகரில் ரூ.1,791.23 கோடியில் கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 10.1 கிலோமீட்டர் தொலைவுக்கு உயர்மட்ட சாலை கட்டப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசின் நிதியில் இருந்து கட்டப்பட்டது. ஒன்றிய அரசு நிதியில் கட்டப்பட்டதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *