மதுரை,மே21- ‘பெண்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் பெரும் மாற்றத்தை உருவாக்கு வார்கள்’ என சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா கூறினார்.
இந்திய வழக்குரை ஞர்கள் சங்கத்தின் 8ஆவது மாநில மாநாடு மதுரை உலக தமிழ் சங்கத்தில் 19.5.2023 அன்று நடந்தது. துணைத்தலைவர் சாமிதுரை வரவேற்றார். தேசிய துணைத்தலைவர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மாநாட்டை துவக்கி பேசுகையில், ‘‘நீதிபதி ஆவதால் நல்ல பல காரியங்களை செய்ய முடியும். எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்ததால் வைகையில் தடுப்பணை கட்டி, வற்றாத அளவுக்கு வண்டியூர் தெப்பக்குளத் தில் தண்ணீர் தேக்கி அதனை இயல்பு நிலைக்கு கொண்டுவர முடிந்தது.
மிகவும் அற்புதமான அரசமைப்பு சட்டத்தை அம்பேத்கர் உருவாக்கிக் கொடுத்துள்ளார். பல நாடுகளில் பெண்களுக்கு ஓட்டுரிமை கொடுக்கப் படவில்லை.
இந்தியா பலமாக இருப் பதற்கு நமது அரசமைப்பு சட்டம் தான் காரணம். ஆணுக்கு பெண் சமம் என்ற சமநீதியைக் கொண்ட தும் நமது நாடு மட்டுமே. நீதி மன்றம் எந்த விசயத் தையும் சமமாகவே பார்க்கிறது.
பெண்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் பெரும் மாற் றத்தை உருவாக் குவார்கள். சென்னை உயர்நீதிமன் றத்தில் 14 பெண் நீதிபதிகள் உள்ளனர்’’ என்றார்.