தமிழ்நாட்டில் இந்த ஆண்டே தொடங்கும் புதிய மருத்துவக் கல்லூரி 200 எம்.பி.பி.எஸ் இடங்கள் அதிகரிப்பு?

2 Min Read

சென்னை, அக்.10 தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் (2025-2026) புதிதாக ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் மாநில ஒதுக்கீட்டிற்காக கூடுதலாக 200 எம்.பி.பி.எஸ். இடங்கள் மூன்றாம் சுற்று கலந்தாய்வில் சேர்க்கப்பட உள்ளன. இதனால் கட்-ஆஃப் குறைய வாய்ப்புள்ளது.

இதுகுறித்து  சில இணைய தளங்களில் எதிர்ப்பார்ப்புகள் வெளி வந்துள்ளன. அதன்படி,

தமிழ்நாட்டில் புதிதாக ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட உள்ளது. இந்தக் கல்லூரியில் இந்த ஆண்டே சுமார் 200 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 200 இடங்களும், தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரகத்தால் நடத்தப்படும் மாநிலக் கலந்தாய்வில் மூன்றாம் சுற்றில் சேர்க்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

மாணவர்களுக்கு
ஒரு கூடுதல் வாய்ப்பு

புதிய மருத்துவக் கல்லூரி மற்றும் 200 இடங்கள் சேர்ப்பு என்பது, ஏற்கனவே நீட் தேர்வு முடிவுகள் மற்றும் முதல் இரண்டு சுற்றுக் கலந்தாய்வுகளுக்குப் பிறகு சில இடங்களைப் பெறத் தவறிய மாணவர்களுக்குக் கூடுதல் வாய்ப்பை வழங்குகிறது. கலந்தாய்வின் இறுதிச் சுற்றுகளில் இந்தப் புதிய இடங்கள் சேர்க்கப் படும்போது, கட்-ஆஃப் மதிப் பெண்களில் சற்று மாற்றம் ஏற்பட்டு, மேலும் பல மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர வாய்ப்பு உருவாகும். மருத்துவக் கல்வி சேர்க்கை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் கால அட்டவணையில் ஏற்படக்கூடிய மாற்றங்களை மாணவர்கள் தொடர்ந்து கண்காணிப்பது அவசியம். இந்தத் தகவல்கள், மாணவர்களுக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்தும் என்று தெரிகிறது.

புதிய தனியார் மருத்துவக் கல்லூரியில் இருந்து 200 எம்.பி.பி.எஸ். இடங்கள் சேர்க்கப்படுவதால், மூன்றாம் சுற்றின் சீட் மேட்ரிக்ஸ் (Seat Matrix) அதிகரிக்கக்கூடும். இந்த இட அதிகரிப்பின் காரணமாக மாநில ஒதுக்கீட்டிற்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் சற்று குறைய வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, மருத்துவ சேர்க்கைக்கான வாய்ப்பு அதிகரிக்கும் இந்த நேரத்தில், மாணவர்கள் கலந்தாய்வு விதிகளைத் தெளிவாகப் புரிந்துகொண்டு, விதிமுறைகளை அறிந்து, கவனமாக முடிவெடுக்க வேண்டும். புதிய மருத்துவக் கல்லூரியின் தொடக்கம் தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவராகும் கனவை நிறைவேற்ற ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *