வாரணாசி மசூதியில் ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் தடை

Viduthalai
1 Min Read

புதுடில்லி, மே 21– ஞானவாபி மசூதியில் உள்ள சிவலிங்கம் போன்ற வடிவம் குறித்து அறிவியல்பூர்வமாக ஆய்வு மேற்கொள்ளுமாறு அலாகா பாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது.

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணா சியில் உள்ள காசி விஸ்வநாதர் 

கோயிலையொட்டி ஞானவாபி மசூதி உள்ளது. முகலாய மன்னர் அவுரங்கசீப் உத்தரவின்பேரில், கோயிலின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு அந்த மசூதி கட்டப்பட்டதாக ஹிந்துக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

அந்த மசூதியில் சிவலிங்கம் இருப் பது கண்டறியப்பட்டதாகக் கூறப்படு கிறது. இந்நிலையில், சில ஹிந்துக்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த அலாகாபாத் உயர் நீதிமன்றம், ‘சிவலிங்கம் போன்ற வடிவம் எந்தக் காலத்தைச் சேர்ந்தது என்பதை தெரிந்துகொள்ள, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அறிவியல்பூர்வமாக அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்’ என்று அண்மையில் உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக ஞான வாபி மசூதி நிர்வாகக் குழு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட், பி.எஸ்.நரசிம்மா, கே.வி.விஸ்வ நாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக 19.5.2023 அன்று விசார ணைக்கு வந்தது. 

அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘அலாகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல் களின் விளைவுகளை உன்னிப்பாக ஆராய வேண்டியுள்ளது. எனவே இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரை உயர்நீதிமன்ற உத்தரவு நிறுத்தி வைக்கப் படுகிறது’ என்று தெரிவித் தனர். இந்த மனு தொடர்பாக உத்தரப் பிரதேச அரசு, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த ஹிந்து மனுதாரர்கள் பதிலளிக்க நீதிபதிகள் தாக்கீது பிறப்பித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *