கழகக் களத்தில்…!

3 Min Read

11.10.2025 சனிக்கிழமை
தென்காசி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

கீழப்பாவூர்: காலை 10 மணி *இடம்: பெரியார் திடல், கீழப்பாவூர் *தலைமை: சீ.டேவிட் செல்லத் துரை (மாவட்ட காப்பாளர்) *கருத்துரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் தென்காசி மாவட்டத்திற்கு வருகை, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டு தீர்மானங்களை செயலாக்குதல், பெரியார் உலகம் நிதி திரட்டுதல் *குறிப்பு: திராவிடர் கழக, இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, பகுத்தறிவாளர் கழக, பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்வீர்கள் *அழைப்பின் மகிழ்வில்: வழக்குரைஞர் த.வீரன் (மாவட்ட கழகத் தலைவர்), வை.சண்முகம் (மாவட்டச் செயலாளர்).

மதுரை மாநகர் புறநகர் மாவட்ட மகளிர் அணி கலந்துரையாடல் கூட்டம்

மதுரை புறநகர்: காலை 10.30 மணி *இடம்: பெரியார் மய்யம், கீழமாசி வீதி, மதுரை * பொருள்: மகளிரணி செயல்பாடுகள் குறித்து திட்டமிடல் * கலந்துரையாடல் கூட்டத்தில் திராவிடர் கழக மகளிரணி மாநில செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி அவர்கள் கலந்து கொண்டு கருத்துரை வழங்க இருக்கிறார்கள்.கழகத்தின் அனைத்து அணிகளின் பொறுப்பாளர்களும் தோழர்களும் குறிப்பாக நமது குடும்ப மகளிரணி தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். * மகிழ்வுடன்: பெரி.பாக்கியலட்சுமி, க.நாகராணி, அ.அல்லிராணி, கலைச்செல்வி.

திருநெல்வேலி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

தச்சநல்லூர்: மாலை 5 மணி *இடம்: பெரியார் மய்யம், கீர்த்தி மெட்டல், தச்சநல்லூர், திருநெல்வேலி *வரவேற்புரை: ந.மகேசு (மாவட்ட துணைத் தலைவர்) *தலைமை: ச.இராசேந்திரன் (மாவட்ட கழக தலைவர்) *முன்னிலை: இரா.காசி (கழக காப்பாளர்), சி.வேலாயுதம் (கழக காப்பாளர்) *நோக்கவுரை: இரா.வேல்முருகன் (மாவட்ட செயலாளர்) *ஏற்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), மு.தமிழ்ச்செல்வன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) *பொருள்: தமிழர் தலைவர் 28.10.2025 அன்று களக்காடு வருகை, பெரியார் உலகம் நிதியளிப்பு  *வேண்டல்: திராவிடர் கழக, இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, பகுத்தறிவாளர் கழக, பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தவறாது பங்கேற்க வேண்டுகிறோம் *நன்றியுரை: மாரி.கணேசு (மாவட்ட துணைச் செயலாளர்) *ஏற்பாடு: திருநெல்வேலி மாவட்ட திராவிடர் கழகம்.

12.10.2025 ஞாயிற்றுக்கிழமை
கன்னியாகுமரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

நாகர்கோவில்: காலை 10 மணி *இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில் *வரவேற்புரை: ஞா.பிரான்சிஸ் *தலைமை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: ம.தயாளன் (மாவட்ட காப்பாளர்), உ.சிவதாணு (மாவட்ட தலைவர், ப.க.) *தொடக்கவுரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்ட செயலாளர்) *சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் குமரி மாவட்ட வருகை, திராவிடர் கழக நாகர்கோவில் மாநாடு, பெரியார் உலக நிதி திரட்டுதல் *நன்றியுரை: ச.நல்லபெருமாள் (மாவட்ட துணைத் தலைவர்).

தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு  காரைக்குடி (கழக)  மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் நடத்தும்  கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி

காரைக்குடி: காலை 9.30 மணி *இடம்: இடம்: குறள் அரங்கம், ஆக்சிஸ் பேங்க் மேல்தளம், காரைக்குடி * வரவேற்புரை:  ந. செல்வராசன், மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம் *தலைமை:  செல்வம் முடியரசன், மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம். * முன்னிலை: சு.முழுமதி. மு.சு.கண்மணி (மாநில துணைப் பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * நன்றியுரை: இரா.முத்துலெட்சுமி மாவட்டத் துணைச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம் * விழைவு:  கழகத் தோழர்களின் தவறாத வருகை. * அழைப்பு: பகுத்தறிவாளர் கழகம், காரைக்குடி (கழக) மாவட்டம்.

13.10.2025 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல் 1063
புலவர் வெற்றியழகன் பிறந்த நாள் விழா

சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை *வரவேற்புரை: கோ.பிச்சைவள்ளிநாயகம் (துணைத் தலைவர்) *தலைமை: மு.இரா.மாணிக்கம் (பொருளாளர்) *முன்னிலை: கூடுவாஞ்சேரி ராசு, ஆ.வெங்கடேசன் *படைப்புகள் அறிமுக உரை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர்) *வாழ்த்துரை: வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்) *ஏற்புரை: புலவர் வெற்றியழகன் (நெறியாளர்) *இணைப்புரை: வை.கலையரசன் (செயலாளர்) *நன்றியுரை: கவிஞர் வாசல் எழிலன் (துணைத் தலைவர்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *