கூட்டுறவு வங்கிகளுக்கு அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் எச்சரிக்கை

1 Min Read

அரசியல்

சிவகங்கை, மே 22  கூட்டுறவு வங்கிகளில் தவறான முறையில் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றினால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் எச்சரித்துள்ளார். 

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.30.5 கோடியில் கூடுதல் அவசர கால தாய்சேய் நல சிகிச்சை மய்யம் மற்றும் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப்பிரிவு கட்ட டத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ் வில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் நடை பெற்றது. 

மாவட்ட ஆட்சியர் (பொ) மணி வண்ணன், மருத்துவக் கல்லூரி டீன் சத்தியபாமா, நகராட்சித் தலைவர் சிஎம்.துரைஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

தொடர்ந்து கே.ஆர்.பெரியகருப்பன் செய்தியாளர் களிடம் கூறியதாவது: 

”2,000 ரூபாய் பணப் பரிவர்த்தனை யில் தேசிய வங்கிகளுக்கான விதி முறையே கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும். காலக்கெடு வரை உணவுப் பங்கீட்டுக் கடைகள் மட்டுமின்றி அனைத்துக் கடைகளிலும் 2,000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தலாம். கடந்த காலத்தில் பணமதிப்பிழப்பு செய்தபோது, அதிமுக அரசு கூட்டுறவு வங்கிகள் பணத்தை மாற்றியது என திமுக குற்றம் சாட்டியது. அதே தவறு மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட் சியில் நடக்காது. கூட்டுறவு வங்கிகளில் தவறான முறையில் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றினால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.” 

இவ்வாறு அவர் கூறினார்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *